Sunday, March 29, 2020

இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்!

இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சேவைகள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாத்திரம், இலங்கையிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், தொழிநுட்பம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதற்கு, மனிதாபிமான ரீதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், இலங்கையிலுள்ள பிரயாணிகளை ஏற்றிச் செல்வதற்கும் வருகின்ற விமானங்களுக்காக திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment