Saturday, December 14, 2019

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் , வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ஏ.எச்.எம் பௌஸி நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தேசியப் பட்டியல் ஆசனத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகின்ற ஜனவரி 03ஆம் திகதி கூடுகின்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்றையும் வழங்க உத்தேசித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment