Saturday, December 21, 2019

அடுத்து வெலிக்கடை செல்வது நான்தான்! ஆதரவாளர்கள் மத்தியில் அழுதார் றிசார்ட்.

எதிர்வரும் நாட்களில் தான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படலாம் என இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்படும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலின்போது எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

றிசார்ட் பதுயுதீன் மீது அரச வளங்களை சூறையாடியமை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சதோச நிறுவனத்தில் பலகோடி மோசடி கோப் கொமிசன் முன்னிலையில் அம்பலமாகியுள்ளது. மேலும் வன்னி பிரதேசங்களில் காணி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை றிசார் எதிர்கொண்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்படின் பிணை பெறுவதற்கு உச்ச நீதிமன்று செல்லவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அரசில் உயர் மட்டத்தின் பலரை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளபோதும் அது பலனளிக்காத நிலையில், அவரது சகோதரன் அரசிற்கு நெருக்கமான வட்டாரங்களுடாக தூதனுப்பிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment