Friday, December 13, 2019

கிழக்கிலுள்ள அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கவே நான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளேன். - ஆளுநர் அநுராதா

கிழக்கில் உள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை ஆளுநராக நியமித்தார் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநராக நேற்று தமது அலுவலகத்தில் கடமையேற்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மாகாண ஆளுநர் பதவியேற்பதற்கு இணையாக கிழக்கு உரிமைகள் பாதுகாப்பு அமைப்பால் மரம் நடும் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய அமைப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகித்யசூரி குணதாச அமரசேகர, ரியர் அட்மிரல் சரத் வீரசேக்கர, தேசபக்தி தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, டாக்டர் நிமல் கருணாசிறி மற்றும் டாக்டர் நலிந்த கஸ்தூரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment