Wednesday, December 25, 2019

பாராளுமன்றைக் கூட்டி, அரசாங்கத்தை அமைப்போம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி, ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்று, அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு உள்ளதாக, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே உள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கேற்ப எந்தவொரு சந்தர்ப்பத்தில் பிரதமரை நியமிப்பதற்கு அமைச்சரவையைக் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அந்தக் கட்சிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment