ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறிப்பிடுகின்றது. இரு சாராருக்குமிடையே இலச்சினை தொடர்பில் மேலெழுந்துள்ள பிணக்குத் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையகத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்கள் அவரிடம் இலச்சினையில் மாற்றம் ஏற்படுமான எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்கும்போது, "அது பேச்சு வார்த்தையில் நிகழ வேண்டியதொரு விடயம்". நாட்டைப் பாதுகாப்பதற்காகச் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் நாங்கள் கைகொடுக்கத் தயாராகவுள்ளோம்" என பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தொடர்ந்து குறுக்கிட்டு ஊடகவியலர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டுச் சேர்ந்தால் இலச்சினையில் மாற்றம் ஏற்படும்தானே எனக் கேட்டார்.
அதற்குப் பதலளிக்கும்போது,
"இல்லை... இனி முடியா காரியங்களும் இல்லையே. எங்களால் இயலுமான காரியங்கைள நாங்கள் செய்வோம்" எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment