Sunday, March 17, 2019

133 இலட்சம் பெறுமதி கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பருத்தித்துறை கடற்கரையோரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 88 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 47 மற்றும் 60 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா தொகை, சில நாட்களுக்கு முன்னர், கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இந்த நிலையில் கைதான இருவரிடமும் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


No comments:

Post a Comment