Sunday, February 10, 2019

சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தும், விசேட சுற்றுநிருபம்

சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தும், விசேட சுற்றுநிருபம் ஒன்றை வௌியிடவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இந்த விசேட சுற்று நிரூபம் வெளியாகவுள்ளது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். சட்டவிரோத மதுபானம் காணப்படும் எந்த இடமாக இருந்தாலும் குறித்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment