கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சிக்கு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் விஜயம் செய்த பிரதமர், எங்கள் பிள்ளைகள் ரகசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், தன்னை பதவியில் அமர்த்தினால் அந்த முகாம்களை இனம்கண்டு அவர்களை விடுவிப்பேன் என கூறியிருந்தார்.
எமக்கு தீர்வு பெற்று தருவதாக கூறிய அவர் பதவி கிடைத்ததும், பலாலியில் வைத்து, எமது மண்ணில் உங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடு இல்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்பொழுது மறப்போம் மன்னிப்போம் என கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் வெளியிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment