அண்மையில் பிரதமராக ரணில் விக்ரமசின்ஹ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு, நாவலப்பிட்டி நகர சபையின் ஏற்பாட்டில், இந்த பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றைய தினம் இரவு, மர்ம நபர்களால் ரணிலின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் சசங்க சம்பத் சஞ்சே,காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்த நாவலப்பிட்டி காவல்துறையினர், CCTV கேமராக்களின் உதவியுடன், வெகு விரைவில் குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களைக் கைது செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment