Thursday, December 13, 2018

மன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம்! கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா?

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப் பெற்றது.

புலிகள் சிறைப்பிடித்து வைத்திருந்த பலரை இருப்பு கம்பிகளால் பிணைத்து வைத்திருந்தனர் என அவ்வாறு சித்திரை அனுபவித்து தெய்வாதீனமாக தப்பிய சிலர் கடந்தகாலங்களில் பகிரங்கமாக அறிவித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்ற பாணியில் இக்கொலைகளுக்கு பொறுப்பானவர்களில் ஒருவரான எழிலனின் மனைவியான அனந்தி சசிதரன், எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உண்மைகள் வெளியானால் தனக்கு ஏதாவது சிக்கல் வராவிட்டாலும், வாக்கு பிச்சை எடுத்துக்கொள்ள முடியாது போகும் என்ற அச்சத்தில் தனக்கு ஏதும் தெரியாதவர் போல் நடிக்க முற்படுகின்றார் அனந்தி.

மன்னாரில் வைத்து இன்று (13) ஊடகங்கள் முன்னிலையில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள அனந்தி, இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது, இந்த சம்பவத்திற்கு யார் உரியவர்கள், யாரால் கொல்லாப்பட்டர்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment