மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். மாணாண சபைகளுக்கான எல்லை நிர்ணயப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் புதிய முறையின் கீழ் தேர்தலை நடாத்துவது முடியாத காரணமாகையால் பழைய முறைப்படி தேர்தலை நாடாத்த முடியுமா என்று நீதிமன்றின் சிபார்சினை அறிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியயுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தலை நடத்தாமை சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவினை குற்றம் சுமத்துவதாக அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment