Sunday, December 9, 2018

மத்திய கிழக்கில் வேலை தேடிச் சென்று வருடத்திற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை தெரியுமா?

கடந்த 11 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களில் 222 பேர் இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களே இவ்வாறு இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் 74 பேரும் குவைத்தில் 44 பேரும் இறந்துள்ளனர். 222 பேரில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 6 பெண்களாவர்.

இவர்களின் சிலர் இயற்கை மரணம் எய்தியும் வாகன விபத்துகளின் போதும் நோய்வாய்ப்பட்டும் இறந்துள்ளனர்.

மேலும் 18 இலங்கை தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment