Thursday, December 13, 2018

சபாநாயகர் அமைச்சின் செயலாளர்களை அழைத்து பேசியது தவறாம். வாசு.

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் அமைச்சு செயலாளர்களை கூட்டுதல் முடியாது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். என்.எம். பெரோரா மண்டபத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற அமைச்சு செயலாளரர்களை அழைத்து கூட்டங்களை நடத்த பாராளுமன்ற கபினட் அமைச்சரவை காணப்படுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் பாராளுமன்றத்தில் அமைச்சு செயலாளர்களை அழைக்க இயலாது என அவர் தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் அமைச்சின் செயலாளர்களை அழைத்து கபினட் ஒன்று நாட்டில் இல்லாத நிலையில் செயலாளர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்ததக்கதாகும்.

No comments:

Post a Comment