Monday, December 24, 2018

சினம்கொண்ட யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே யானை பாகன் பலி - பல வீடுகள் சேதம்

கரன்தெனிய பகுதியில் இடம்பெற்ற பெரஹரவில் யானை தாக்கியதில் பாகன் ஒருவன் உயிரிழந்துள்ளான்

நேற்று (23) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிதீகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த யானை அப்பகுதியில் இருந்த பல வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் மிருக வைத்தியர்கள் ஒன்றிணநை்து குறித்த யானையை பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment