Saturday, April 16, 2016

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் திரிபோஷா பதுக்கிய சுகாதாரபணிமனை ஊழியர்கள்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சுகாதாரபணிமனையில் மக்களுக்காக கொடுக்கப்பட்ட திரிபோஷாவை ஊழியர்கள் பதுக்கி வைத்துள்ளதாக பயனாளர்கள் மிகவும் விசனம் தெரிவிக்கின்றனர். இத்திரிபோஷா பக்கட்டுக்கள் குழந்தைகள், கற்பவதிகள், நிறைகுறைந்தபிள்ளைகள், பாலுட்டும்தாய்மார் வழங்கப்படவேண்டியவை.

பொருட்களை பதுக்குதல் பின்னர் அவற்றை கறுப்புச் சந்தையில் விற்றல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

குறித்து மோசடிச் செயல் அண்மையில் திணைக்கள உயர் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் , சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.



No comments:

Post a Comment