Sunday, October 5, 2014

உவா மக்களின் வாக்கு முடிவுகள் மஹிந்தவின் கழுத்தில் கத்தியாக. மின்சாரக் கட்டணத்தை குறைக்கு உத்தரவு.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி மூன்றாவது முறையாகவும் ஆசனத்தில் அமர தீர்மானித்துள்ள மஹிந்தருக்கு கடந்த ஊவா மாகாண சபை முடிவுகள் பேதி மருந்தாக அமைந்துள்ளது. இம்முடிவுகள் முன்றாவது முறையும் ஆசனத்தில் அமரவேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும். நாட்டில் ஊழல் அற்ற நல்லாட்சி வேண்டும் என்று செய்தியை சொல்லியுள்ளது.

இதன் விளைவாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 25 சதவீத மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணத்துடனான மின் கட்டண பட்டியல் எதிர்வரும் தினங்களில் வாடிக்கையாளர்களு;ககு கிடைக்குமென இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

ஊவா தேர்தல்களுக்கு முன்னர்; 25 சதவீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி உத்தரவிட்டார் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மின் கட்டணத்தை குறைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் தொடக்கம் அமுலுக்கும் வரும் வகையில் சகல வாடிக்கையாளர்களுக்கும் மின் கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

No comments:

Post a Comment