Sunday, August 3, 2014

ஐ.நா பட்டியலில் இணைந்தார் ஜனாதிபதி மஹிந்த!

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறுகின்றபோது கூட்டத்தின் இரண்டாம் நாளில் ஜனாதிபதி மகிந்த உரையாற்றுவார் என அறிவிக்கப்பட் டுள்ளது.

இரண்டாம் நாளில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளினதும் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் ஆரம்ப தினத்தில் உரையாற்றவுள்ளனர்.

இதற்கிணங்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் உலகத் தலைவர்களின் உத்தேச பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment