Thursday, July 31, 2014

ஊடகவியலாளர்களுக்கு அமெரிக்கா எந்த நோக்கத்தில் உதவுகிறது? புரியாத புதிராக உள்ளது - கெஹெலிய

யாழ் ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த பயிற்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் இரத்து செய்ததாக தெரிவித்து அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட் டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் இலங்கையின் ஊடகவியலா ளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக் கையில் சுட்டிக்காட்டியிருந்தது. எவ்வாறாயினும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அமெரிக்க தூதரகம் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு எந்த நோக்கத்தில் உதவுகிறது என்பது தெளிவில்லை என குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment