குறித்த நபர் மாம்பழத்தினைக் கொடுத்து சிறிது தூரம் கூட்டிச்சென்ற பின் சிறுமியின் வாயினைப் பொத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிணற்றில் நீர் அள்ளச் சென்ற சிறுமியினைக் காணாத பெற்றோர் தேடிப்பார்த்தபோது பற்றைக்குள் குறித்த சிறுமி இருப்பதனைப் பார்த்துள்ளனர். சிறுமி நடந்த சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப் படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நெல்லியடி பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து அதே பகுதியினைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் நேற்று மாலை கரவெட்டி பகுதியில் வைத்து நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நபர் இரண்டு திருமணங்கள் செய்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment