Sunday, June 15, 2014

மறு அறிவித்தல் வரை அளுத்கமவில் ஊடரங்கு அமுல்!

அளுத்கமை பிரதேசத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்துக்கு மேலதிகமாக பேருவளைப் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய இணைந்து இன்று எதிர்ப்புப் ஊர்வலம் ஒன்றை அளுத்கமவில் நடாத்தியது. அதன்போது அதில் கலந்துகொண்டவர்கள் முஸ்லிம் கடைகளையும் சில வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். கல்லால் தாறுமாறாக எங்கும் வீசியெறிந்துள்ளனர்.

நிலைமைய சுமுக நிலைக்குக் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப் புகை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment