Tuesday, June 17, 2014

BBS தலைவர் கிரம விமலஜோதி தேரர் இராஜினாமா?

தர்காநகர் தாக்குதலுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் தான் பொதுபல சேனாவின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக பொதுபலசேனா அமைப்பை ஸ்தாபித்த கிரம விமலஜோதி தேரர் தெரிவித்திருக்கின்றார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

அளுத்கம, பேருவல, தர்காநகர் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ள கண்மூடித்தனமான, பொதுபல சேனாவின் அடிப்படைவாத ஈனச் செயலைத் தான் கண்டிப்பதனாலேயே அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்ததாகவும், தொடர்ந்து வருகின்ற பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தியைத் தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment