Sunday, January 26, 2014

யாழ்.இந்திய துணைத்தூரகத்தில் நடைபெற்ற 65 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்!

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று(26.01.2014) காலை 9.02 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாய பூர்வமாக இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இதனை தொடர்ந்து இந்திய தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் குடியரசு தின வாழ்த்து செய்தி உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களினால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் உதவி உயர்ஸ்தினிகர் ஆக பதவியேற்றது முதல் இன்று வரை செய்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றினார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆவது தடவையாகவும் இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment