Friday, June 14, 2013

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்களை பதிவு செய்வது கட்டாயம்! ராஜித்த சேனாரத்ன

கடலுக்குச் செல்லும் மீனவர்களை பதிவு செய்து கொள்ளும் முறைமை கடுமையாக அமுல்படுத்தப்பட விருப்பதாகவும், அதற்கிணங்க படகுகளில் உயிர்க்காப்பு அங்கிகள் கட்டாயப்படுத்தப்படுவதுடன், அனைத்து படகுகளையும் இயல்பாகவே காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கும் வகையில் இச்செயற்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மீன்பிடித்துறையமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்தத்தை அடிப்படையாக கொண்டு, மேற்படி நீண்டகால திட்டங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த விருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் பல தடவைகள் அனைத்து மீனவர்களையும் காப்புறுதி செய்யுமாறு நாம் தெரிவித்த போதும் அதில் ஒருசிலர் மாத்திரமே அக்கறை செலுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment