Thursday, June 13, 2013

சிரிய பிரஜையின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியது சவூதி!

சவூதி அரேபியா சிரிய பிரஜை ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைவஸ்துகளை சவூதி அரேபியாவிற்குள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த சிரிய பிரஜையின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதக்கொள்கை, போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் மாத்திரம் 51பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

1 comment:

  1. It is shocking how these brutal killers have a good relationship with
    the west and west too maintain a friendly relationship with the Saudi.

    ReplyDelete