Thursday, June 13, 2013

பத்து வயது சிறுமியை கர்பம்மாக்க பலமுறை முயன்றவர் கைது

மிஹிந்தலை குருந்தன்குளம் பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பாடசாலை அதிபர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பாடசாலைக்கு அருகே வர்த்தக நிலையமொன்றை நடத்திச் சென்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிறுமி வர்த்தக நிலையத்திற்கு சென்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் சிறுமியின் தந்தை ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் தாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment