Thursday, June 13, 2013

பெயர் வைக்கும் சண்டை முடிவுக்கு வந்தது!

சாய்ந்தமருது மீனவர் வாசிகசாலைக்கு மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் இன்று நடைபெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில் இதற்கான அங்கீகாரத்தை மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்.

மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக சாலை அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

(யு.எம்.இஸ்ஹாக்)

No comments:

Post a Comment