Thursday, June 13, 2013

இன்றும் மன்னாரிலிருந்து பொத்துவில் வரை கடலில் பயணிக்க வேண்டாம்!

இன்று (13) மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் வரை கடலின் ஆழமான ஆழமற்ற எங்கும் பயணம் மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் பணிகள் மேற்கொள்வோரிடம் கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் வரையான கடல்பகுதியும், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையுள்ள கடற்பகுதியும் பேரலைகளுடன் காணப்படுகின்றன.

மன்னாரிலிருந்து காலியூடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதியும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பகுதியும் பேரலைகளுடன் காணப்படுகின்றன.

புத்தளத்திலிருந்து காலியூடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் இடைக்கிடையே மழை அல்லது கடும் காற்றுடன் மழை பெய்யவுள்ளதாகவும், நாடெங்கும் கடலை அண்மித்த பகுதிகளில் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் இன்று காலை 05.30க்கு வானிலை பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காற்று தென் மேற்குத் திசையிலிருந்து வீசவுள்ளதுடன் அதனது வேகம் மணித்தியாலத்திற்கு கி.மீ. 30-40 அளவில் இருக்கும். மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் கடற்பிரதேசங்களிலும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையுள்ள கடற்பிரதேசங்களிலும் இந்தக் காற்று பலமாக வீசக்கூடியதாகவுள்ளது. மேலும் இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70கி.மீ. அளவில் உயர்வதற்குரிய சாத்தியக்கூறுகளும் உள்ளன எனத் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment