Saturday, March 2, 2013

வீரக்கெட்டியவில் பொது பல சேனாவின் ஹலால் எதிர்ப்புப் பேரணி!

தொடர்கதையாகும் பொது பல சேனாவின் ஊர்வலம்

ஹலாலுக்கு எதிராக இன்று (02) காலை 9. 30 மணிக்கு பொது பல சேனா இயக்கத்தினரின் மூலம் ஹலாலுக்கு எதிர்ப்பான ஆர்ப்பாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றது.

நூற்றுக்கு மேற்பட்ட பௌத்த துறவிகளும் 500க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ‘ஹலால் வேண்டாம், ஹலாலுக்கு எதிராக குரல் கொடுப்போம்’ என்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் பௌத்த மதகுருமார் வீதிவலம் வந்தனர்.

பிரச்சினைகள் எழாமல் இருக்க பொலிஸாரும் அக்குழுவிடனருடன் கூடிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

1 comment:

  1. no job does those will started
    corruption motherland this are
    buddhist no way this are the
    peoples are nation lovers
    i don`t thing so rear let see
    playing game get for benefits
    or distroyer
    good them

    ReplyDelete