Tuesday, November 20, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர்கள் மேலும் 50 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட வானூர்தி மூலம் ,வர்கள் தாயகம் திரும்பியதாக, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவர்களில் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 9 பேரும், மாத்தறையை சேர்ந்த 19 பேரும், புத்தளம் பகுதியை சேர்ந்த 13 பேரும், திருகோணமலையை சேர்ந்த இருவரும் இதில் அடங்குகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்கென, இவர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 284 இலங்கையர்கள், தாயகம் திரும்பியுள்ளமை, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment