Monday, October 15, 2012

இலங்கையில் செயற்கை மழைவீழ்ச்சி

இலங்கையில் செயற்கை மழைவீழ்ச் சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், அது தொடர்பான நடவடி க்கைகளை முன்னெடுக்க சீன அரசாங்கத்தின் உதவி பெறப்படவு ள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பேதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரட்சியான நிலை தொடர்ந்து நிலவுவதால், அதனை தடுக்கும் நோக்கில் நிரந்தர தீர்வொன்ரற பெற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு அனைவரும் தள்ளப்பட்டுள் ளதாகவும், இதனால் செயற்கை மழை வீழ்ச்சியை உருவாக்குவது தொடர்பான தொழிநுட்பத்தை சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ளவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment