Wednesday, October 10, 2012

45 தமிழர்களும் 20 சிங்களவர்களும் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா விற்கு செல்ல முற்பட்ட மேலும் 67 இலங்கையர்கள், சிலாபம் கடலே றியில் கைது செய்யப்பட்டது. கடற் படையினரின் சுற்றிவளைப்பை தொட ர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 45 தமிழர்கள் மற்றும் 20 சிங்களவர்கள் உட்பட 6 சிறு பிள்ளைகளும் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டோர், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, இங்கிரிய, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என, இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment