Saturday, September 29, 2012

வன இலாக்கா அதிகாரியின் கத்திக் குத்துக்கு இலக்காகி சக ஊழியர் மரணம் - மன்னாரில் சம்பவம்

மன்னார் வன இலாக்கா சிரேஸ்ட வன அதிகாரியின் கத்திக் குத்துக்கு இலக்காகி சக வன இலாக்கா ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவருக்கும் இடையிலான தொழில் பிணக்கே இக்கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் திஸாவாவியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய வன இலாக்கா அதிகாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment