Friday, November 18, 2011

விருந்துண்ணச் சென்ற மூன்று பெண்கள் உட்பட அறுவர் ஆற்றில் மூழ்கி மரணம்.

கிரிஉல்ல பொலிஸ் பிரிவில் தம்பதெனிய மும்மன்ன என்ற இடத்தில் இன்று மாலை 3 மணி அளவில் அவாடகொடவௌக் குளத்தில் நீராடச் சென்ற ஆறுபேர் மூழ்கி மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு சிலேவைலனைச் சேர்ந்தவர்கள் எனவும் மும்மன்னப் பிரதேசத்திற்கு உறவினரின் வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிப்படுகிறது.

இந்த ஆறுபேரில் மூன்று பெண்களும் ஒரு சிறுமி இருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியா 4.50 மணி அளவில் ஒரு ஆணின் சடலத்தைக் கண்டிபிடித்து கரை சேர்த்துள்ளனர். இந்தச் சடலங்கள் யாவும் தற்பொழுது தம்பதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment