Wednesday, November 30, 2011

யசூசி அகாசி - ரவூப் ஹகீம் சந்திப்பு

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீமை இன்று சந்தித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு நியாயாம் கிடைக்கும் வகையில் அது அமைய வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு சிறந்த தீர்மானமென்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். பிரச்சினைக்கு தீர்வு காணும்போது சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழர்களினதும் ஆதரவு அவசியமில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment