Wednesday, November 30, 2011

மருந்து இறக்குமதியாளர்கள் தகவல்களை வழங்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு

மேற்கத்தேய மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், தமது தகவல்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனையாகும் மருந்துப்பொருட்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் தரவுகளை களஞ்சியப்படுத்துவதற்காக இந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. வர்த்தகப்பெயர், முகவரி, வர்த்தகத்தின் தன்மை, தொடர்புகொள்ளக்கூடிய நபர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகள் ஆகியன நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட வேண்டும்.

இத்தகவல்களை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருமாறு, நுகர்வோர் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மருந்துப்பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருந்துப்பொருட்களின் விலை தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கு, இதன்மூலம் முடியுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment