இவ்விபத்து இன்று காலை 8.28 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் டிரக்டரின் பெட்டியில் சென்ற 61 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் என்ற ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த டிரக்டரின் சாரதியும் மற்றுமொருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
No comments:
Post a Comment