விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் நார்போல்க் நகரில் எல்லிங்காம் ஹால் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் தங்கி உள்ள வீட்டில் வாசல் உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பார்க்க வருவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவரது ஆதரவாளர்களில் ஒருவரான டேனியல் ஹாமில்டன் என்பவர் ஊடகமொன்றுக்கு கூறும்போது, அசாஞ்சே ஒன்றும் கிரிமினல் குற்றவாளியல்ல. ஒரு தனிபட்ட நபரின் அந்தரங்க விசயங்களில் அத்துமீறி நுழைவது அநாகரிகமானது. உடனடியாக கண்காணிப்பு கேமராவினை அகற்ற வேண்டும். காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். Thursday, June 16, 2011
விக்கிலீக்ஸ் நிறுவனர் தொடர்ந்தும் வீட்டுக்காவலில் .
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் நார்போல்க் நகரில் எல்லிங்காம் ஹால் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் தங்கி உள்ள வீட்டில் வாசல் உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பார்க்க வருவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவரது ஆதரவாளர்களில் ஒருவரான டேனியல் ஹாமில்டன் என்பவர் ஊடகமொன்றுக்கு கூறும்போது, அசாஞ்சே ஒன்றும் கிரிமினல் குற்றவாளியல்ல. ஒரு தனிபட்ட நபரின் அந்தரங்க விசயங்களில் அத்துமீறி நுழைவது அநாகரிகமானது. உடனடியாக கண்காணிப்பு கேமராவினை அகற்ற வேண்டும். காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment