சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்த முயற்சித்த இந்தோனேஷியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த வருடம் 254 இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் கடத்துவதற்கு குறித்த இந்தோனேஷிய பிரஜை முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்ரஹாம் லொசொன்பெசி எனப்படும் கப்டன் பிராம் என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையை தவிர்ப்பதற்காக கப்டன் பிராம் 25 மில்லியன் இந்தோனேஷிய ருபியாக்களை செலுத்தினார்.
குடிவரவு சட்டங்களை மீறி சட்டவிரோத ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திறக்hக பிராம் ஏற்கனவே 20 மாத சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த நபர் இதுவரையில் 1500 சட்டவிரோத குடியேறிகளை அவுஸ்திரேலியாவிற்குள் வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளதாகத் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment