Tuesday, April 27, 2010

வடக்கின் புனரமைப்புக்காக உலக வங்கி 100 மில்லியன் கடனுதவி

வடக்கின் புனரமைப்பு பணிகளுக்காக உலக வங்கி 100 மில்லியன் ரூபாவினை கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. தௌ்ளிப்பழை மற்றும் உடுவில் பிரதேசங்களில் 3000 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வடிகாலமைப்பு திட்டங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளா கே.விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment