திராவிட இயக்கம் சாதி- பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் இயக்கம். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் முன்னேற்றத்திற்காக அக்கறையுடன் செயல்படும் இயக்கம்.
சமூக நீதிக்கு சோதனை வந்தபோது பெருந்தலைவர் காமராஜர் உள்பட பல்வேறு தலைவர்கள் போர்க்குரல் கொடுத்து, அதை காப்பாற்றி இருக்கிறார்கள். ஓமந்தூரார் தாடி வைக்காத பெரியார் என்று குறிப்பிடுவார்கள். திராவிட இயக்க கொள்கைகளை கொண்ட அவர் தேசிய இயக்கத்தில் இருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடி புகழ்பெற்றவர்.
அவரது பெயரை போற்றும் வகையில் புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சாதி உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக நாம் கைவிட வேண்டும். அதை உள்ளத்தில் இருந்து அகற்ற வேண்டும். சமூக ஒற்றுமை சமூக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் சாதி உணர்வு கூடாது.
நாம் எல்லோரும் இந்திய நாட்டவர். இங்குள்ள அனைவரும் தமிழ் சாதி என்ற ஒரே சாதியாக அமர்ந்து இருக்கிறோம். இங்கிருந்து வெளியேறும்போது 5 பேர், 10 பேர் சேர்ந்து தங்களது சாதியைப்பற்றி பேசி தமிழர் என்ற ஒற்றுமையை மறந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழர் இனம் என்ற ஒரே உணர்வை பெறும் மண்டபமாக இந்த திருமண மண்டபம் அமைய வேண்டும். மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment