Tuesday, November 10, 2009

பா.உ ரங்கபண்டாரவின் மனைவி பாதுகாப்பு தேடுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார வின் மனைவி காந்தி சேனநாயக்க அவர்கள் தனது ஆசிரியை தொழிலை முன்னெடுக்கும் பொருட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை சுதந்திர ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது.

கொழும்பு ஆனந்தா பாளிகா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் காந்தி சேனநாயக்க அவர்கள் பாராளுன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் சட்ட ரீதியான மனைவியாகும். அவர் கடந்த சில காலங்களாக தனது கணவனில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவரது இரு குழந்தைகளும் தகப்பனின் பராமரிப்பிலேயே வாழந்து வருகின்றனர்.

ஆனால் இந்நிலைமை பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் அரசியலுக்கு பாதகமாக அமைந்துள்ளாதாக தெரிவித்து அவர் ஆசிரியை காந்த சேனாநாயக்கவை மிரட்டிவருவதாக இலங்கை சுதந்திர ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவி கந்தப்பன்கொட தெரிவித்து அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

அத்துடன் ஆசிரியை காந்தி சேனாநாயக்க தனக்கு விடுக்கப்படும் மிரட்டல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment