Tuesday, November 10, 2009

5 வருடங்களுக்கான புதிய திட்டம் ஒன்றை பொலிஸ் மா அதிபர் பிரதமரிடம் கையளித்தார்.

புதிதாக நியமனம் பெற்று பொலிஸ் மா அதிபர் பொலிஸ் திணைக்களத்தின் அபிவிருத்தி தொடர்பான தனது 5 வருட திட்டமொன்றை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவிடம் கையளித்தார். இத்திட்டத்தை கையளித்து பேசிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா தனது திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சகல பிரிவுகளும் அடக்கப்பட்டுள்ளதாவும், திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களுக்கு பொலிஸாரினால் சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது மக்களுடன் மிகவும் சினேகபூர்வமாகவும் நெருக்கமாகவும் பொலிஸார் நடந்து கொள்ளவேண்டும் என பிரதமர் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டார்.

கடந்தகாலங்களில் பொலிஸாரின் அதிகார துஸ்பிரயோகம் மிகவும் பாரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment