Sunday, November 8, 2009

கிழக்கில் போரினால் மூடப்பட்ட 140 பாடசாலைகளை திறக்க ஏற்பாடு.

கிழக்கு மாகாணத்தில் போரினால் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட சுமார் 140 பாடசாலைகளை துரிதமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலைகளில் 68 பாடசாலைகளின் புனர் நிர்மான வேலைகள் பூர்தியடைந்துள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் மேலும் 10 பாடசாலைகளை புனர் நிர்மானம் செய்ய முடியும் எனவும் புனர் நிர்மான வேலைகள் முடிவுற்றதும் அவை உடனடியாக கல்விச் சேவைக்காக திறக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment