Thursday, October 8, 2009

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இலங்கைக்கான இந்தியத் தூதர் நியமனம்.

இந்திய அயலகப் பணியின் உயர் அதிகாரியும், இலங்கைக்கான இந்தியத் தூதருமாகிய அலோக் பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் நியமனங்கள் குழு எடுத்த முடிவின்படி அலோக் பிரசாத் இரண்டு ஆண்டுகள் வரையோ அல்லது அடுத்த மாற்றம் நடைபெறும் வரையோ இப்பதவியில் இருப்பார்.

1974 பிரிவு அதிகாரியான பிரசாத் கொழும்பில் பணிபுரிவதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இந்தியத் தூதராகவும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment