Tuesday, October 20, 2009

ராஜரட்ணம் ஐ.தே.க எம்பி ரவி கருணாநாயக்க விற்கு பணம் வழங்கினாரா?

பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க FBI இனரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பணம் பெற்றுள்ளதாக தகவல் கசிகின்றன.

அமெரிக்க வங்கி ஒன்றில் இருந்து கொழும்பில் உள்ள வங்கி கணக்கொன்றுக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாணயமாற்று விதிகளுக்கு முரணாக மாற்றப்பட்டது தொடர்பாக ரவிகருணாநாயக்க உட்பட மூவருக்கு கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை எதிர்வரும் 02.02.2010 இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இப்பணம் இராஜரெட்ணத்தினால் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment