இராணுவ அதிகாரிகளின் பெயர்களை தவறான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் ஊடகங்கள், சுயலாப நோக்கம் கொண்டு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸருக்கும் சம்பந்தப்பட்ட உத்தியோகித்தர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரச்சாரங்களுக்காக இராணுவ உயரதிகாரிகளின் பெயர்களை பாவிப்பது சட்டவிரோதம் எனவும் அவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடும் ஊடகங்களுக்கு எதிராக சட்டநடிவடிக்கை எடுக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.
இலங்கை சட்டதிட்டங்களின் படி இராணுவ அதிகாரிகள் சேவையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபடுதல் மற்றும் அரசியல் கட்சி ஒன்றுக்கான பிரச்சார வேலைகளில் ஈடுபடுதல் குற்றமாகும்.
No comments:
Post a Comment