Friday, October 30, 2009

மனநோயாளியை கடலில் மூழ்கடித்த பொலிஸ் உத்தியோகித்தர் சரண்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் புத்தி சுயாதீனமற்ற இளைஞன் ஒருவர் கடலில் பலவந்மாக மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகித்தர் பொலிஸில் சரணடைந்துள்ளதாவும் அவரை கைது செய்துள்ள பொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

ரிஎன்எல் தொலைக்காட்சி நிறுவனத்தின் வீடியோ பிரிவினர் குறிப்பிட்ட இளைஞன் நீரில் முழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை வீடியோ செய்துள்ளனர். இவ்வீடியோ நாடா சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு போதுமானது என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment