Thursday, October 29, 2009

வட கிழக்கில் அடை மழை ஆரம்பம்

வடகிழக்கில் வழமையாக பெய்துவரும் பருவ மழை இவ்வருடம் கிடைக்காமையால் குடி தண்ணீர் உட்பட தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வந்தது விபசாய நிலங்கள் வறண்டு காணப்பட்டது விபசாய உற்பத்திகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் வட கிழக்கில் பருவமழை ஆரம்பித்துள்ளது இதனால் மக்களின் முகங்களில் மலர்ச்சி காணப்படுகின்றது.

பருவ மழை பெய்வது சொந்த வீடுகளில் வாழும் மக்களுக்கும் விபசாயிகளுக்கும் மகிழ்ச்சி என்றாலும் அகதிகளாக முகாம்களில் வாழும் மக்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் இரட்டிப்பாகப் போகின்றன. தொற்று நோய்கள் முகாம்களில் பரவும் அபாயமும் உள்ளது.


கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.

No comments:

Post a Comment