Monday, October 5, 2009

ஐக்கிய தேசிக் கட்சி எம்பி ரங்க பண்டாரவின் வீட்டிற்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரது குறிப்பிட்டவீடு அவரது வசிப்பிடமாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகமாகவும் இருந்து வந்துள்ளது.

வீட்டிற்கு தீ மூட்டப்பட்டபோது அவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரியவருகின்றது. தென்மாகாணத்திற்குச் சென்றுள்ள பா.உ ரங்கபாண்டார இடம்பெற இருக்கும் தென்மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடு தீப்பற்றி எரிவதை கண்டுகொண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அங்கு விரைந்த பொலிஸார் மக்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருந்தபோதிலும் வீட்டின் பாதிப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பா.உ ரங்க பண்டார, வீடு தனது வசிப்பிடம் மட்டும் அல்லாது கட்சி அலுவலாகமாகவும் இருந்து வந்தது. கணனிகள், போட்டோ பிரதி இயந்திரம், பிற பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் விலைமதிப்பற்ற ஆவனங்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment